சாவகச்சேரி நகரசபை அலுவலகத்துக்கு துவிச்சக்கர வண்டிகளுக்குரிய 2018 ஆம் ஆண்டுக்கான இலக்கத் தகடுகள் வந்துள்ளன.
துவிச்சக்கர வண்டிகள் வைத்திருப்போர் இலக்கத் தகடுகளை சபை அலுவலகத்தில் பெற்று துவிச்சக்கரவண்டிகளில் பொருத்துமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மாதங்களில் துவிச்சக்கரவண்டிகள் பரிசோதனை பொலிஸாரால் மேற்கொள்ளப்படவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனையில் இலக்கத் தகடு பொருத்தப்படாத துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள தெனவும் நகரசபையினர் அறிவித்துள்ளனர்.