தேவையான பொருட்கள்
பூந்திக்கு
கடலைமாவு-1கப்
அரிசிமாவு-1டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1சிட்டிகை
மஞ்சள் & சிவப்பு food colors- தலா 2 துளிகள்
தண்ணீர் -1/2கப் to 3/4கப்
எண்ணெய்
சர்க்கரைப் பாகுக்கு
சர்க்கரை -1கப்
தண்ணீர் 1 கப்
அலங்காரத்துக்கு ?
ஏலக்காய்-2
கிராம்பு-2
முந்திரி -10
திராட்சை-10
கல்கண்டு-1 டேபிள்ஸ்பூன்
நெய்-1டேபிள்ஸ்பூன்
செய்முறை
சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து பிசுபிசுப்பு பதம் வரும்வரை கொதிக்கவிட்டு எடுத்துவைக்கவும். ஏலக்காயைத் தட்டி பாகில் போட்டுவைக்கவும்.
முந்திரி, திராட்சை,கிராம்பு இவற்றை நெய்யில் பொரித்து எடுத்துவைக்கவும்.
கடலைமாவு,அரிசிமாவு,பேக்கிங் சோடாவுடன் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். அதனுடன் food color சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.
மிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து பூந்திகரண்டியில் மாவை ஊற்றவும். பூந்திகளை அதிகம் முறுகவிடாமல் எடுத்துவிடவும்.[எண்ணெயில் விழுந்த பூந்திகள் சில நொடியிலே எண்ணெய் ஓசை அடங்கி மிதக்க ஆரம்பிக்கும். உடனே எடுத்துருங்க.]
பொரித்த பூந்திகளை பேப்பர் டவலில் வைத்து எண்ணெய் வடியவைத்து எடுத்து வைக்கவும். எல்லாமாவையும் பூந்திகளாக பொரித்து எடுத்ததும், ஒரு கைப்பிடி பூந்தியை மிக்ஸியில் ஒருமுறை pulse-ல் போட்டு எடுத்து பூந்தியுடன் கலக்கவும். வறுத்த முந்திரி-திராட்சை-கிராம்பு, 2 கரண்டி சூடான சர்க்கரைப் பாகு சேர்த்து கலந்து 5 நிமிடங்கள் வைக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து இன்னும் இரண்டு கரண்டி சூடான பாகு சேர்த்து கல்கண்டும் சேர்த்து கலந்துவைக்கவும். [முந்திரி திராட்சை சேர்க்கும்போதே கல்கண்டும் போட்டுக்கலாம், நான் மறந்துட்டேன். ;)]
மீண்டும் 5 நிமிஷங்கள் கழித்து மீதமுள்ள (சூடான) பாகு முழுவதையும் ஊற்றி கலந்து, 1/2 மணி நேரம் ஊறவிடவும். கையில் நெய் தடவிக்கொண்டு லட்டுகளாகப் பிடித்துவைக்கவும். சுவையான சூப்பர் டூப்பர் லட்டு (!) ரெடி!