யாழில் 13 வயது மாணவி தூக்கில் தொங்கி மரணம்!!

யாழ். மாதகல் பகுதியில் 13 வயதான மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவியை காணவில்லை என வீட்டார் தேடிய போதுஇ அவர் மரம் ஒன்றில் தூக்கிட்டு கொண்டுள்ளதனை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.