யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்தில் திடீர் சோதனை!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் 4 கிலோ கேரள கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா போதை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) தினம் மேற்கொண்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதக்கவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா போதை தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, நேற்றய தினமும் மட்டும் சுமார் 70 கிலோ கஞ்சா மீட்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.