இளம் தாய் மற்றும் சேய்க்கு நடந்த பயங்கரம்!

திம்புலாகல – மில்லான – இத்தபிச்ச வாவிக்கு அருகில் உந்துருளியொன்று வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரமொன்றில் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

24 வயதுடைய இளம் தாயொருவரும் அவரின் இரண்டரை மகளுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.