உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் இலங்கையில் தரையிறக்கம்!!

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya மத்தள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த விமானம் இன்று காலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய மேலாளர் உபாலி கலன்சூரிய தெரிவித்துள்ளார்.எரிபொருள் நிரப்புவதற்காகவும், அந்த விமானத்தில் வந்த குழுவினர் ஓய்வெடுப்பதற்காகவுமே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

6 என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த சரக்கு விமானம் 600 தொன் எடை கொண்டது.இந்த சரக்கு விமானம் 10 பிரித்தானிய போர் தாங்கிகளை சுமக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.