முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் புதுவருடத்தை சிறப்பாக கொண்டாடினார்.
தங்காலையில் உள்ள அவரின் கார்ல்டன் இல்லத்தில் இன்று கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது சிங்கள பாரம்பரியங்களுக்கு அமைய புத்தாண்டு கொண்டாட்டம் இடம்பெற்றது.
சுபநேரத்தில் பொங்கல் பொங்கியதுடன், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் முதற்பெண் இணைந்து மரக்கன்று ஒன்றையும் நாட்டினர்.
இதன்போது மஹிந்த ராஜபக்ஷ விவசாயியாக மாறி மரநடுகையில் ஈடுபட்டார்.
இந்த கொண்டாட்ட நிகழ்வில் மஹிந்தவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.