சீனாவின் ஆதிக்கத்தால் இந்திய இலங்கை உறவில் விரிசல்

சீனாவுடனான நட்பினால் இந்திய இலங்கை ராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்றைய தினம் அந்நாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கையின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, இதன்காரணமாக தமிழ் மக்களுக்கான தேவைகளை உரிய முறையில் நிறைவேற்ற முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இந்தியா உட்பட வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கை ஏதிலிகளை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.