வோர்னரின் மனை­வியின் கருத்தால் புதிய சர்ச்சை.!

பந்தை சேதப்­ப­டுத்­திய வோர்­னரின் மோச­மான நடத்­தைக்கு தானே காரணம் என்று அவ­ரது மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார்.

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான போட்­டி­யின்­போது பந்தை சேதப்­ப­டுத்­திய விவ­கா­ரத்தின் சர்ச்சை இன்னும் ஓய்ந்­த­பா­டில்லை. இச் சம்­பவத்­தால் அவுஸ்­தி­ரே­லிய வீரர்­க­ளுக்கு பலமுனை­க­ளி­லி­ருந்தும் விமர்­சனக் கணைகள் தொடர்ந்து தொடுக்­க­ப்பட்­டுக் ­கொண்­டி­ருக்­கின்றன.

இந்நிலையில் குறித்த விவ­கா­ரத்தில் வோர்­னரின் மனைவி கேன்டிஸ் திடுக்­கிடும் தக­வல்­களை வெளி­யிட்­டுள்ளார். அவுஸ்­தி­ரே­லிய பத்­தி­ரிகையொன்றுக்கு அளித்த பேட்­டியில் அவர் கூறி­ய­தா­வது:-

பந்தின் தன்­மையை மாற்றி வெற்றி காணும் தவ­றான திட்டம் எனது கண­வரின் மனதில் உதித்­த­மைக்கு நானே காரணமென்று உணர்­கிறேன். அக்குற்­ற­ உ­ணர்ச்சி என்னை கொன்று விடும் போலிருக்­கி­றது. எனது கண­வரின் செய­லுக்கு நான் மன்­னிப்புக் கோர­வில்லை. ஆனால் தென்­னா­பி­ரிக்க தொடரின் போது என் மீதும் குழந்­தைகள் மீதும் விழுந்த அவ­தூறு பேச்­சு­ க­ளுக்கு பதி­லடி கொடுக்­கவே அவர் அவ்­வாறு செய்து விட்­ட­தாகத் தோன்­று­கி­றது. போர்ட் எலி­சபெத் டெஸ்ட் போட்­டியை பார்க்கச் சென்ற போது சில ரசி­கர்கள் எனது முன்னாள் காத­லரின் முக­மூ­டியை அணிந்து கொண்டு என்னை கீழ்த்­த­ர­மாக கேலி செய்­தனர். என்னைப் பார்த்து ஏள­ன­மாக சிரித்­தனர். இது­போன்ற சம்­ப­வங்கள் வோர்­னரை வெகு­வாக தடு­மாற வைத்து விட்­டது என்று கேன்டிஸ் கூறி­யுள்ளார்.