உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளை அன்றாடம் உட்கொள்வதால் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.
அதுவும் இந்த கொலஸ்ட்ரால் பிரச்சனை ஆரம்பித்து விட்டால், அது நாளடைவில் இதய நோயை உண்டாக்கி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
இத்தகைய பாதிப்பில் இருந்து ஒரே மாதத்தில் முழுமையாக விடுபட ஒரு அற்புதமான பானம் உள்ளது.
தேவையான பொருட்கள்
- பரங்கிக்காய் – 100 கிராம்
- தண்ணீர் – 200மிலி
தயாரிக்கும் முறை
ஓரளவு கனிந்த பரங்கிக்காயை விதையுடன் சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவு எடுத்துக் கொண்டு அதை மிக்ஸியில் போட்டு 200 மிலி நீர் ஊற்றி நன்கு அரைத்தால் பானம் தயார்.
பருகும் முறை
தினமும் காலை உணவு உண்பதற்கும் 1/2 மணிநேரத்திற்கு முன்பு இந்த பானத்தை குடிக்க வேண்டும். இதேபோல் ஒரு மாதம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
நன்மைகள்
- பூசணிக்காயின் விதைகள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.
- நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சும் அளவைக் குறைத்து, கொலஸ்ட்ரால் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- பூசணி விதைகளில் உள்ள மக்னீசியம், ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் பராமரித்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.