969 சாதாரணதர பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் முடக்கம்!

2017ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகிய கா.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில் வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளில் பல்வேறு காரணங்களின் நிமித்தம் 969 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட மாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.