தாய் ஒருவரின் மோசமான செயல்… பிள்ளையின் ஆடைக்குள் சிக்கிய மர்மம்!

கைக் குழந்தையின் ஆடையில் மறைத்து சிறையிலுள்ள கணவருக்கு போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி, உத்தரானந்த மாவத்தையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிடைத்த தகவலுக்கமைய 11 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் விற்பனையாளரான அவரது கணவர் கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தொடர்ந்தும் மனைவி போதைப்பொருள் வழங்குவதாகவும், ஒரு பக்கட் 4000 ரூபாய்க்கு சிறைச்சாலையினுள் விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது 11 மாத குழந்தையின் ஆடையில் மறைந்து கோட்டை நீதிமன்றத்திற்கு சந்தேக நபரான பெண் வருகைத்தந்த போது, கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் 35 வயதான 3 பிள்ளைகளின் தாய் எனவும் அவரது கணவர் ஹெரோயினுக்கு கடுமையாக அடிமையான ஒருவர் என கூறப்படுகின்றது.

அவரிடம் கைப்பற்றப்பட்ட ஹேரோயினின் பெறுமதி கிட்டத்தட்ட 2 லட்சம் ரூபாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.