சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைத்த மைத்திரி

பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இஸ்லாமாபாத் நகரில் தூதரக வளாகத்திலுள்ள புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது சிறப்பு சமயக் கிரியை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழிபாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு ஆசீர்வாதங்களை பெற்றுகொண்டுள்ளதுடன் விகாரை வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் மேல் மாகாண தலைமை சங்கநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய அகுரட்டியே நந்த தேரர், சங்கைக்குரிய பகமுனே சுமங்கல தேரர், பேராசிரியர் சங்கைக்குரிய நாபிரித்தன்கடவல ஞானரத்ன நாயக்க தேரர் மற்றும் நேபாளம், இந்தியா, மியன்மார், கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தூதுவர்கள் உயர் ஸ்தானிகர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.