கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்த பங்களாதேஷ் வீரர்களின் செயற்பாடு!

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான இன்றைய இருபதுக்கு – 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஷ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இச் செய்பாடானது கிரிக்கெட் உலகை  முகம் சுளிக்க வைத்துள்ளது.