சென்னையில் தன்னுணர்வு அற்று படுத்து கிடந்த முதியவரின் உடலில் தீயினை வைத்து எரித்த இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் முதியவர் ஒருவர் தன்னுணர்வு அற்று படுத்துகிடக்கிறார். அப்போது இளைஞர்கள் சேர்ந்து அந்த முதியவரின் உடலில் தீயினை வைத்து எரிக்கின்றனர்.
அதில், இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அந்த முதியவர் எழுந்திருக்க முடியாமல் நகர்ந்து செல்கிறார், இதனைப்பார்த்து அந்த இளைஞர்கள் சிரிக்கிறார்கள்.
இறுதியில் அந்த முதியவர் மெதுவாக தரையில் நகர்ந்து சென்று தீயை அணைத்துக்கொள்கிறார்.
இந்த வீடியோ பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.