தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு…

இலங்கை தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் போது தமிழரசு கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட “புதிய சுதந்திரன் பத்திரிகையானது” மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் உருவாக்கப்பட்ட “சுதந்திரன் பத்திரிகை” நாட்டின் அசாதாரண நிலை காரணமாக வெளிவராத நிலையில் தற்போது “புதிய சுதந்திரன்” எனும் பெயரில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.