பதற்­றத்தை ஏற்­ப­டுத்­திய கண்டி­ க­ல­வ­ரம் கட்­டுப்­பாட்­டுக்­குள்!

நாடு முழு­வ­தும் பெரும் பதற்­றத்தை ஏற்­ப­டுத்­திய கண்டி இனக்­க­ல­வ­ரம் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

எனினும் கண்டி மாவட்­டத்­தின் பிர­தான வீதி­க­ளில் ஆயு­தம் ஏந்­திய இரா­ணு­வத்­தி­னர், கடற்­ப­டை­யி­னர், பொலி­ஸார் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். பவள் கவச வாக­னங்­கள் தொடர்ச்­சி­யாக ரோந்து நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

நேற்று முன்­தி­னம் பக­லில் தலை­தூக்­கி­யி­ருந்த வன்­மு­றை­கள், நேற்று முன்­தி­னம் இரவு வரை­யில் தொடர்ந்­தது. முப்­ப­டை­யி­ன­ரின் முழு­மை­யான கட்­டுப்­பாட்­டில் கண்டி கொண்டு வரப்­பட்ட பின்­னர், வன்­மு­றைச் சம்­ப­வம் எவை­யும் பதி­வா­க­வில்லை.

நிலமை சுமு­க­மா­ன­தை­ய­டுத்து, கடும் பாது­காப்­புக்கு மத்­தி­யில் நேற்­றுக் காலை 10 மணிக்கு ஊர­டங்­குச் சட்­டம் நீக்­கப்­பட்டு, மாலை 4 மணிக்கு மீண்­டும் நடை­மு­றைக்குக் கொண்டு வரப்­பட்­டது.

கண்டி மாவட்­டத்­தில் கடந்த ஞாயிற்­றுக் கிழமை திகன, தெல்­தெ­னிய பிர­தே­சங்­க­ளில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனக் கல­வ­ரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. திங்­கட்கிழமை மதி­யம் இந்த நிலமை உச்­சத்­துக்­குச் சென்­றது. பொலி­ஸா­ரால் வன்­மு­றை­யா­ளர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை தோன்­றி­யது. இத­னை­ய­டுத்து உட­ன­டி­யாக நடை­மு­றைக்கு வரும் வகை­யில் திங்­கட் கிழமை பி.ப. 3 மணிக்கு ஊர­டங்­குச் சட்­டம் பிறப்­பிக்­கப்­பட்­டது. மறு­நாள் செவ்­வாய்க் கிழமை காலை 6 மணிக்கு ஊர­டங்­குச் சட்­டம் நீக்­கப்­பட்­டது.

கல­வ­ரக்­கா­ரர்­க­ளால் தீ வைக்­கப்­பட்டு எரி­யூட்­டப்­பட்ட வீட்­டி­லி­ருந்து முஸ்­லிம் இளை­ஞ­னின் சட­லம் மீட்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மீண்­டும் ஊர­டங்­குச் சட்­டம் பிறப்­பிக்­கப்­பட்­டது. ஆங்­காங்கே சிறு வன்­மு­றை­கள் தொடர்ந்­தன.

செவ்­வாய்க் கிழமை இரவு, வெளி­யி­டங்­க­ளி­ருந்து கண்­டிக்­குள் நுழைந்த கல­வ­ரக்­கா­ரர்­கள் சுமார் 400பேர் மீண்­டும் வெறி­யாட்­டம் நடத்­தி­னர்.

பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டுக்­கும் அவர்­கள் அடங்­க­வில்லை. ஊர­டங்­குச் சட்­டம் பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லும், கல­வ­ரம் நேற்­று­முன்­தி­னம் வேறு இடங்­க­ளுக்­கும் பர­வி­யது. அக்­கு­றணை, கட்­டு­கஸ்­தோட்டை, மட­வள, அம்­பத்­தன்ன பிர­தே­சங்­க­ளி­லும் முஸ்­லிம்­க­ ளுக்கு எதி­ரான வன்­முறை தொடர்ந்­தது.

இத­னை­ய­டுத்து கண்டி மாவட்­டத்­துக்கு மேல­திக இரா­ணு­வத்­தி­ன­ரும், கடற்­ப­டை­யி­ன­ரும், சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரும், பொலி­ஸா­ரும் துரி­த­மாக கள­மி­றக்­கப்­பட்­ட­னர். அத்­து­டன் சமூ­க­வ­லைத் தளங்­க­ளும் நாடு முழு­வ­தும் முடக்­கப்­பட்­டன.

பாது­காப்பு இறுக்­கப்­பட்ட பின்­னர் கண்டி மாவட்­டத்­தில் மெல்ல மெல்ல வன்­மு­றை­கள் தணி­யத் தொடங்­கி­ன. பொது­மக்­கள் அத்­தி­ய­ாவ­சியப் பொருள்­கள் கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நேற்­றுக் காலை 10 மணி­யி­லி­ருந்து மாலை 4 மணி வரை ஊர­டங்கு தளர்த்­தப்­பட்­டது. பொது­மக்­கள் வீதி­க­ளில் இறங்­கி­னர். எரி­யூட்­டப்­பட்ட தமது சொத்­துக்­களை முஸ்­லிம்­கள் பார்­வை­யிட்­ட­னர்.

முறு­கல் நிலமை தோன்­ற­லாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் இடங்­க­ளில் முப்­ப­டை­யி­னர் குவிக்­கப்­பட்­டி­ருந்­த­னர். ஊர­டங்கு தளர்த்­தப்­பட்ட நேரத்­தில் எது­வித அசம்­பா­வி­தங்­க­ளும் நடை­பெ­ற­வில்லை. கண்டி மாவட்­டம் முப்­ப­டை­யி­ன­ரின் கண்­டுப்­பாட்­டுக்­குள் முழு­மை­யா­கக் கொண்டு வரப்­பட்டு நேற்று முன்­னி­ரவு வரை­யி­லும் எது­வித வன்­மு­றை­க­ளும் மீள­வும் தலை­தூக்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

கண்டி மாவட்­டத்­தில் பாது­காப்­பைப் பலப்­ப­டுத்த முப்­ப­டை­யி­ன­ரும் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்ள அதே­வேளை, இரா­ணு­வத்­தி­ன­ருக்கும், பொலி­ஸா­ருக்­கும் இடை­யி­லான ஒருங்­கி­ணைப்பை மேற்­கொள்­வ­தற்­கான அதி­கா­ரி­யாக மேஜர் ஜென­ரல் ருக்­மன் டயஸ் நிய­மிக்­கப்­பட் டுள்­ளார். கண்டி மாவட்­டத்­தில் நிறுத்­தப்­பட்­டுள்ள படை­யி­னர் மற்­றும் பொலி­ஸா­ருக்கு இடை­யில் ஒருங்­கி­ணைப்­புப் பணியை மேற்­கொள்­வ­தற்­காக இந்த நிய­ம­னம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கண்டி மாவட்­டத்­தில் 850 இரா­ணு­வத்­தி­ன­ரும், 128 கடற்­ப­டை­யி­ன­ரும் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்று இரா­ணு­வப் பேச்­சா­ளர் பிரி­கே­டி­யர் சுமித் அத்­த­நா­யக்க தெரி­வித்­துள்­ளார். மேலும், 250 இரா­ணு­வத்­தி­னர் தயார் நிலை­யில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார். தேவைப்­பட்­டால் மேல­திக படை­யி­னரை ஏனைய பகு­தி­க­ளில் இருந்து அழைக்க முடி­யும் என்­றும் இரா­ணு­வப் பேச்­சா­ளர் தெரி­வித்­துள்­ளார்.