தெலுங்கானாவில் 13 வயது சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் அப்துல் வகாப் (76). இவர் தனது வீட்டு அருகில் வசிக்கும் 13 வயது சிறுமிக்கு சொக்லேட்களை வாங்கி கொடுத்து கடந்தாண்டு யூன் மாதம் முதல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் சொல்லாத நிலையில் கடந்த மாதம் அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவனைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமிக்கு சாதாரண வயிற்றுவலி என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் வயிறு வீக்கம் அதிகமான நிலையில் சிறுமி கர்ப்பமாக இருப்பதை பெற்றோர் கண்டுப்பிடித்து அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து முதியவர் அப்துலை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
