பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போது உத்தியோகபூர்வ விஜயமாக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மனைவியை சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் எலோசியஸிற்கு பிணை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே அவர் பிரதமரை சந்தித்துள்ளார்.
பிரதமர், சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் அர்ஜுன் மகேந்திரனின் மனைவி பல முறை அழைப்பேற்படுத்தி எப்படியாவது சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கூறியுள்ளார். பிரதமரை சந்தித்தவர் தனது மருமகனுக்கு எப்படியாவது பிணை வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
அலோசியஸ் பிணை பெற்று வெளியே வந்தவுடன் ஏனைய விடயங்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் அதற்காக தலையிடுமாறும் அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது அதற்கு அடுத்த நாள் அர்ஜுன் அலோசியஸ் பிணை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்காக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பிப்பார் எனவும், அதற்கான சிறப்பான பதில் கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை அர்ஜுன் மகேந்திரன் இந்த நாட்களில் பெல்ஜியம் பிரசல்ஸ் நகரில் வாழ்வதாகவும், நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றவர் அண்மையில் பெல்ஜியம் சென்றுள்ளார்.
அவரது மருமகன் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் இலங்கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமான உள்ளதென குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.