உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை முக்கியமான சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், தகவல் வெளியிட்ட அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த, நாளை வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று கூறினார்.
அதேவேளை, நாளை ஊடகங்களின் ஆசிரியர்கள், நிர்வாகிகளை சிறிலங்கா அதிபர் சந்திக்கவுள்ளார். இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் தொடர்பாக விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.