வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவன் கோவிலில் சிவராத்திரி தினத்தில் புகுந்த பௌத்த துறவிகள்!!

வரலாற்றுச் சிறப்பு பெற்ற சோழ மன்னன் கட்டிய பொலன்னறுவை சிவன் ஆலயத்தில் பல தசாப்த காலத்திற்கு பிறகு சிவராத்திரி விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.இது இலங்கை வாழ் இந்துக்கள் மத்தியில் புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் தோற்றுவித்துள்ளது.அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பூரண அனுசரணையுடன் சமன்பிட்டி வாழ் மக்களினால் பாலன் சுதாகரனின் தலைமையில் அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தது.இதன்போது பூஜைகளில் பௌத்த சமய துறவிகளும், மாணவ சிறார்களும் கலந்து கொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.