இந்தியாவில் கூடுதல் வரதட்சணை தராததால் மனைவிக்கே தெரியாமல், அவரது சிறுநீரகத்தை விற்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ரீட்டா சர்க்கார் (28). ரீட்டாவின் கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அறுவை சிகிச்சை செய்ய வற்புறுத்தியதோடு, அதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்ற பின்னர் அறையில் வைத்து பூட்டப்பட்ட ரீட்டா வயிற்றுவலி தாங்க முடியாமல் அலறியுள்ளார்.
ஆனால் அவரை கணவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாத நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு ஸ்கேன் செய்த போது தமது வலது பக்க சிறுநீரகம் இல்லாததை அறிந்து ரீட்டா அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும் இடது பக்க சிறுநீரகத்துக்கும் நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, கூடுதல் வரதட்சணையை தான் கொடுக்காததால் தனது சிறுநீரகத்தை கணவர் விற்றுள்ளதாக ரீட்டா பொலிசில் புகார் அளித்தார்.
புகாரையடுத்து ரீட்டாவின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.