கண் இமைகள் துடித்தால் உண்மையில் பணம் கிடைக்குமா?

கண்ணடிச்சு காமி என்றால் அந்நியன் அம்பி ஸ்டைலில் கண்ணடித்து சிரிக்க வைத்து கடுப்பேற்றுவது எல்லாம் பழைய ஸ்டைல், குழந்தைகள் முதற்கொண்டு இன்றைக்கு மிகவும் அசால்ட்டாக கண்ணடிக்கிறார்கள். எங்கே யாரைப் பார்த்து, எதில் கற்றுக் கொண்டிருப்பார்கள் எல்லாம் தனி ட்ராக். சிலருக்கு காரணமேயில்லாமல் கண்கள் தானாக துடிக்கும்.

அதை அனுபவித்திருக்கிறீர்களா? சிலருக்கு அது உணர முடியும், சிலரால் அதனை உணர முடியாது, கண்களை வேகமாக சிமிட்டுவது போலவோ அல்லது கண்ணிமைகள் படபடவென்று அடித்துக் கொள்வது போலவோ தோன்றிடும். சிலர் கண்கள் இப்படி துடிப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும், பணம் வரப்போகிறது என்றெல்லாம் சொல்வார்கள். கண்கள் துடிக்குமா? அப்படி துடிப்பதற்கு என்ன காரணம்

கண்கள் அடிக்கடி துடிப்பதை மயோகிமியா என்று அழைப்பார்கள். கண்களின் கீழ் பகுதியோ அல்லது கண்களின் இமைப்பகுதியோ துடிக்கும். எதற்காக என்று குறிப்பிட்ட காரணத்தை கண்டுபிடிகக் முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம்.

இது எப்போதாவது நீடிக்கும், அல்லது சிலருக்கு தோன்றி மறைந்து விடும். இது வாரக்கணக்கில் அல்லது மாதக்கணிக்கில் நீடிக்கக்கூடாது. மற்றபடி எப்போதாவது இப்படியான பிரச்ச்னை எழுந்தால் கவலை கொள்ளத்தேவையில்லை. பெரும்பாலும் உங்களுடைய வாழ்க்கை முறை மாற்றத்தினாலேயே இந்தப் பிரச்சனை எழுந்திருக்கக்கூடும்

கண் துடிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது ஸ்ட்ரஸ் தான். மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் போது ஏராளமான உள்ளுறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகிறது. அவற்றில் ஒன்றாக, அல்லது அதன் அறிகுறியாக கண்கள் துடிக்கிறது.

போதுமான அளவு நீங்கள் தூங்கவில்லை என்றால் கூட இப்படியான பிரச்சனைகள் எழலாம். கண்களுக்கு அதிக வேலைத் தருவதும் காரணமாக இருக்கலாம். குறைந்த வெளிச்சத்தில் டிவி பார்ப்பது, அதிக நேரம் ஒரே பொசிசனில் உட்கார்ந்து படிப்பது ஆகியவை கண்களுக்கு அதிக ஸ்டரஸ் கொடுக்கும்.

ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கும் மேல் காபி டீ குடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கும் கண்கள் துடிக்கும். உடலில் அதிகப்பட்சமாக சேருகிற கேஃபைன் கண்களை துடிக்கச் செய்திடும். கேஃபைன் எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொண்டால் கண்கள் துடிப்பதும் குறைந்திடும்

பலரும் கண்கள் வறண்டு எரிச்சலடைவதை சந்தித்திருப்பார்கள். குறிப்பாக இந்தப் பிரச்சனை ஐம்பது வயது மேலானவர்களுக்கு வரக்கூடும். கேட்ஜெட்ஸ் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இந்த கண்களில் வறட்சி ஏற்படுவது சகஜம்.

இதன் அறிகுறிகளாக கண்கள் வறண்டு காணப்படும், அதீத எரிச்சல் உண்டாகும். கண்களை அடிக்கடி கசக்க வேண்டும் போன்ற உணர்வு மேலோங்கும். மருத்துவரிடம் சென்றால் அவர் இந்த வறட்சியைப் போக்க ஐ டிராப்ஸ் கொடுப்பார்

உங்கள் உடலில் மக்னீசியம் குறைந்தால் அவற்றின் வெளிப்பாடாக கூட கண்களுக்கு இந்தப் பாதிப்பு உண்டாகலாம். அதோடு எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் தேவை