மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர்கள் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டிய ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்று வந்தனர்.
இந்நிலையில் , அவர்கள் நேற்று இரவு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப் பட்ட நிலையில் இன்றைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், பிணை முறி மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனும் சந்தேகத்திற்குரியவராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்க்கது.






