வரவு செலவுத் திட்டத்தை மேலும் வெளிப்படைத் தன்மைக் கொண்டதாக மாற்ற வேண்டும்!

இலங்கை அரசாங்கம் தமது வரவு செலவுத் திட்டத்தை மேலும் வெளிப்படைத் தன்மைக் கொண்டதாக மாற்ற வேண்டும் என வெரிட்டே என்ற சர்வதேச புத்திஜீவிகள் ஆய்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மைக் கொண்ட வரவு செலவுத்திட்டத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் தென்னாசிய நாடுகளுக்கு மத்தியில் இலங்கை குறைந்த தரத்தைக் கொண்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், வரவு செலவுத் திட்டத்தை விளங்கிக் கொள்ளக்கூடிய வகையிலும், தொழில்நுட்பம் சாராத வரவு செலவு திட்ட ஆவணங்களைக் கொண்டதாகவும் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மேலும், இது பிரஜைகளின் வரவு செலவுத் திட்டமாக அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச தரத்தக்கு அமைய, வரவு செலவுத் திட்டம் தொடர்பான தகவல்களை முறையாக வெளிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.