கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்!

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று இன்று சபாநாயகர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை மற்றும் பாரிய மோசடிகள் அறிக்கை என்பன தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் விவாதிப்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.