அடக்கடவுளே…..இந்த இளம் பெண் செய்த காரியத்தை பார்த்தீர்களா? : என்ன செய்தார் தெரியுமா?!

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு இரு சக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் கடத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

alcohal theift

தமிழகத்தை விட புதுச்சேரியில் தான் மதுபாட்டில்கள் விலை வெகு குறைவாக விற்கப்படுகிறது. இதனால், தமிழகத்தை சேர்ந்த பலரும் புதுச்சேரிக்கு சென்று மது அருந்தும்,மது பாட்டில்கள் வாங்கிவருவதுமான பழக்கம் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, புதுச்சேரி எல்லையை சேர்ந்த கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தான் பலரும் புதுச்சேரிக்கு சென்று குறைந்த விலைக்கு மதுவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கப்படும் நிலையும் அவ்வபோது நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு இரு சக்கர வாகனத்தில் அனுசுயா என்ற 24 வயதான பெண் மதுவை கடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, ஆல்பேட்டை சோதனை சாவடியில் வைத்து அனுசுயாவை கைது செய்து, அவரிடம் இருந்த 100 பாட்டில்களில் இருந்து 120 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டன.