பிணை முறி மோசடி குற்றவாளிகளை தண்டிக்க தமக்கு சக்தியாக இருக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக கோரியுள்ளார்.
கண்டியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களே! இந்த மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுப்பதே முதலில் செய்ய வேண்டும் என இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டியில் வைத்து, பிரதமரிடம் நான் கூறுகின்றேன், என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கவேண்டியவர்களை சிறையில் அடையுங்கள். அதற்கு பின்னிற்க வேண்டாம். அதற்கான சக்தியை எனக்குத் தாருங்கள்.
என்னை பலவீனப்படுத்த வேண்டாம். என அரசாங்கத்தில் உள்ளவர்களிடமும், ஏனைய அனைவரிடமும் நான் கோருகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.