அம்மா ஸ்கூட்டி சும்மா கொடுப்பாங்களா..? தேவையுள்ளவர்கள் இந்த ஆவணங்களை உடனே தயார் செய்துக்கொள்ளவும்..!!!

large_dsc-8273-699x380-5908

இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது.

அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தைத் தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம்.

இருசக்கர வாகனத் திட்டமானது, பணிபுரியும் மகளிருக்கு மட்டுமே அளிக்கப்படும். அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பதிவு செய்த பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாகத் தொழில் செய்யும் பெண்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசுத் திட்டங்களில் பணியாற்றுவோர், மாவட்ட கற்றல் மையம், கிராம வறுமை ஒழிப்புக் குழுக்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் இந்தத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனங்களைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெற 18 வயது முதல் 40 வயது வரையில் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது ஆண்டு வருமான அளவு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது.

மிகவும் பின்தங்கிய பகுதிகள், மலைப் பகுதிகள், கைவிடப்பட்ட, கணவனை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள், 35 வயதைத் தாண்டிய திருமணம் ஆகாத பெண்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் கிடைக்குமிடம்: விண்ணப்பங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. அவற்றை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். கோட்ட அலுவலகங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்கள், ஆட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

சென்னை போன்ற மிகப்பெரிய மாநகராட்சிகள், நகராட்சிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கக் கூடுதலாக கவுன்ட்டர்கள் திறக்கப்படும்.

காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும்.

விண்ணப்பங்களை 22-ஆம் தேதி(இன்று) முதல் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப். 5 கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களை சமர்பிக்கும்போது தேவைப்படும் முக்கிய சில ஆவணங்கள்:

பிறப்புச் சான்றிதழ் (18-40 வயது வரை),

இருப்பிடச் சான்றிதழ்,

ஓட்டுநர் உரிமம்,

வருமான சான்றிதழ் (வேலைபார்க்கும் நிறுவனம், சுய சான்று),பணிபுரியும் நிறுவனத்தின் சான்று,

ஆதார் அட்டை,

வாக்காளர் அட்டை,

கல்வித்தகுதிச் சான்று,

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,

முன்னுரிமை கோருவதற்கான சான்று,

சாதிச் சான்று (ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் மட்டும்),

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை,

வாகனத்திற்கான கேட்பு விலைப் பட்டியல்

ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறும் பட்சத்தில் அதற்கு நிகரான உரிய ஆதாரத்தை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.