1 கோடி சம்பளம் கதாசிரியருக்கு!

வசூலில் சரித்திரம் படைத்த ‘பாகுபலி’ படத்தின் கதையை எழுதியவர் விஜயேந்திர பிரசாத்! அப்படத்தின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜ மவுலியின் அப்பாவான இவர், பாகுபலி படத்தைத் தொடர்ந்து விஜய்யின் ‘மெர்சல்’ படத்தின் கதையிலும் தன் பங்களிப்பு செய்தார். இதற்காக அவருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

vijaynthira-prasanthஇந்த படங்களை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்திற்கு கதை எழுத ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜயேந்திர பிரசாந்த். இந்தப்படம் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் பல படங்களை தயாரித்துள்ள ‘கேமியோ ஃபிலிம்ஸ்’ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மகாதேவ் என்பவர் இயக்குகிறார். விஜயேந்திர பிரசாத்தின் கதையில் தயாராக உள்ள இப்படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார்.

இந்த படம் குறித்த மற்ற தகவல்களை விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் விஜயேந்திர பிரசாத்துக்கு 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது!