நெற்றியில் குங்குமம் வைக்க….இப்படியும் ஒரு காரணமா…?

உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வமான உண்மையை பெண்கள் சந்தனம் மற்றும் குங்குமம் நெற்றியில் இடுவதற்கான காரணங்கள் அறியப்பட்டுள்ளது.e2a3a7a51ea0b085611f74220db0f033_1510550857-b

சந்தனம் குளிர்ச்சி தரக்கூடிய பொருளாகும். குங்குமம் இயற்கை கிருமி நாசினியாக செயல்படுத்தும் தன்மை உள்ளது. இதனால் நெற்றி மற்றும் புருவ மத்தியில் பூசுவதால் உடற்கூறு இயல் காரணிகள் இருப்பதாக கூறுகின்றனர்.

 

  • நம் நெற்றி பகுதியில் ‘பிட்யூட்டரி சுரப்பி’ சந்தனம் மற்றும் குங்குமம் வைக்கும் போது குளிர்ச்சியடைகிறது. இதனால் உடலின் மையத்தை கட்டுப்படுத்தும் மூளையின் பின்பகுதியில் ‘ஹிப்போகேம்பஸ்’என்ற இடத்திற்கு ஞாபக சக்தி பதிவாகும் தூண்டுதல்களை சிறப்பாக இயக்க உதவுகிறது.
  • நெற்றி மற்றும் புருவமத்தி மின்காந்த அலைகளை வெளியிடுவதில் முக்கியமானவை. அதனால்தான், நம் மனம் கவலையால் வாடும்போது, தலைவலி அதிகமாவதை உணர்கிறோம். நெற்றியில் இடும் திலகம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது.
  • சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருக்கும் நெற்றியில் மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு போன்ற நிலைக்கு கொண்டுச்செல்லும்.
  • பெண்கள் நடு நெற்றி மற்றும் புருவமத்தியில் குங்குமத்தை இடுவதும், ஆண்கள் புருவ மத்தியில் அணிவதும் வழக்கம். குங்குமத்தில் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்றவற்றை கலந்து இடுவதால் கிருமி நாசினியாக செயல்படும்.
  • குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.
  • பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.