பசு மாட்டை மோதியது புகையிரதம் – மாணவி காயம்!

மீசாலை புத்தூர் சந்திக்கும் வீரசிங்கம் பாட சாலைக்கு முன்பாக உள்ள ரயில் பாதையில் புல் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு பசு மாடுகள் புகையிரத்துடன்.

மோதுண்டதில் ஒரு பசுமாடு உயிரிழந்ததுடன் மாணவி ஒருவரும் காயமடைந்துள்ளாா்.

hஇந்த சம்பவம் இன்று(16) இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.

இந்த சம்பவம் தொடா்பில் தெரியவருவதாவது….

யாழ்பாணத்தில் இருத்து கொழும்பு நோக்கி சென்று கொண்டு இருந்த புகையிரத்துடன் ரயில் பாதையில் புல் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு பசு மாடுகள். மோதுண்டு தூக்கியெறியப்பட்டன.

இதன்போது புகையிரத்துடன் மோதிய வேகத்தில் இந்த பசு மாடு வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக விழுந்ததில் கல்லூரி முடிவடைந்து வீடு செல்வதற்காக காத்திருந்த மாணவியை மூட்டி மோதியதில் மாணவி காயமடைந்துள்ளர்.

இந்நிலையில் காயமடைந்த மாணவி தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.