அமெரிக்காவில் குடிபோதையில் ஓட்டிய கார் பறந்து 20 அடி மாடிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக அதிகாலையில் சுமார் 5.30 மணியளவில் வேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்புச்சுவரை பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் சுமார் 20 அடி உயரத்தில் வானில் பறந்த கார், ஒரு கட்டிடத்தின் மாடியின் ஜன்னலுக்குள் பாய்ந்து, சொறுகி நின்றது.
பல் டாக்டருக்கு சொந்தமான ஒரு கிளினிக்கில் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் முன்பகுதி புகுந்த நிலையில், பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியது. இந்த காட்சியை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலிசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார், கிரேன் மூலம் அந்த காரை அப்புறப்படுத்தினர். காரில் இரு நபர்கள் இருந்ததாகவும், காரை ஓட்டிச் சென்றவர் குடிபோதையில் இருந்துள்ளார் என விசாரனையில் தெரியவந்துள்ளது.







