அரச குடும்பத்தை புகைப்படம் எடுத்த பெண்!! அடித்த அதிஷ்டம்..!!!

625.500.560.350.160.300.053.800.900.160.90நத்தார் தினத்தன்று பிரித்தானியா அரச குடும்பத்தை பெண்ணொருவர் புகைப்படம் எடுத்த நிலையில் அந்த புகைப்படத்துக்கு கடும் கேள்வி ஏற்பட்டுள்ளது. நாட்டின் நோர்போல்க் கவுண்டியில் உள்ள செண்ட் மேரி தேவாலயத்துக்கு
கடந்த 25ம் திகதி நத்தார் தினத்தன்று இளவரசர் வில்லியம், அவர் மனைவி கேட் மிடில்டன், இளவரசர் ஹரி மற்றும் அவரின் வருங்கால மனைவி மெர்க்கல் ஆகியோர் சென்றிருந்தனர்.

அரச குடும்பத்தினரை பார்பதற்காக அங்கு மக்கள் அதிகளவில் குழுமியிருந்தார்கள்.

கூட்டத்தில் இருந்த கரின் அன்வில் (39) என்ற பெண் நால்வரையும் தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்தார், பின்னர் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் கரின் வெளியிட அது இன்று மிகவும் பிரபலமடைந்துள்ளது.

பிரித்தானியாவின் எல்லா பத்திரிக்கைகளிலும் அந்த புகைப்படம் அட்டை படமாக வந்துள்ளது, இதோடு ஜப்பான், கனடா அமெரிக்கா, ஸ்பெயின் பத்திரிக்கையிலும் குறித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

எல்லா பத்திரிக்கையும் கரினை தொடர்பு கொண்டு தங்களுக்கு அந்த புகைப்படம் வேண்டும் என கூறியே அதை எடுத்து வெளியிட்டுள்ளனர்.

அந்த புகைப்படத்துக்கான உரிமையாளர் கரின் என்பதால் பல நிறுவனங்கள் அவருகான உரிமம் தொகையை வழங்கி வருகின்றன, இதன் மூலம் கரினுக்கு அதிகளவில் பணம் சேர்ந்து வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தெரிவிக்கையில், நான் சாதாரணமாக என் ஐபோனில் தான் புகைப்படம் எடுத்தேன், புகைப்படம் எடுப்பதில் நான் வல்லவர் எல்லாம் கிடையாது.
மொத்தம் எனக்கு எவ்வளவு பணம் வரும் என தெரியாது, ஆனால் இந்த பணத்தை என் மகளின் படிப்புக்காக செலவு செய்வேன் என தெரிவித்துள்ளார்.