திடீர் சுற்றிவளைப்பு! சட்டவிரோத ஆயுதங்கள் மீட்பு!

நாடு முழுவதிலும் நள்ளிரவில் மேற்கொண்ட சுற்றி வளைப்புக்களின் மூலம் 496 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 28ம் திகதி முதல் நேற்றைய தினம் அதிகாலை வரையில் இந்த சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

aresst newதேடப்பட்டு வந்த 76 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 496 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஒரு நாள் காலப் பகுதியில் பொலிஸார், மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபட்ட 4850 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்,

இதில் 738 பேர் மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத ஆயுதங்கள் மூன்றும் மீட்கப்பட்டுள்ளன.