ஆளும் கட்சியான அதிமுகவையும்., எதிர்க்கட்சியான திமுகவையும் தோற்கடித்து RK நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுள்ளார்.
இதனால்., திமுக அதிமுக கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்த நிலையில்., தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க கர்நாடக சென்றிருந்தார்.
பெங்களூர் சிறைக்கு சென்ற தினகரனிடம் சசிகலா ஒரு வார்த்தை கூட பேசவில்லையாம்.
தினகரன் கூறுவதை மட்டும் கேட்டுக்கொண்டு அவரிடம் பேசாமல் திருப்பி அனுப்பிவிட்டாராம்.
அதற்கு காரணம் சசிகலா சிறையில் மௌன விரதம் இருந்து வருகிறாராம். இந்த தகவலை தினகரன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
ஜனவரி மாதம் வரையிலும் சசிகலாவின் மௌன விரதம் தொடரும் என்று கூறப்படுகின்றது.