ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் இறந்த பெண்ணின் வயிற்றில்!

மூளை இறப்பு அடைந்த பெண்ணின் வயிற்றில், ஆரோக்கியமான இரட்டை குழந்தைகள் இருந்ததால் வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இச்சம்பவம் பிறேசில் நாட்டில் இடம்பெற்றுள்ளது.

இறந்த பெண்ணின் வயிற்றில் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள்!

செல்வா ஜம்போலி என்ற 21 வயதுடைய பெண் கடந்த ஒக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக கர்பமடைந்தார். அதே சமயம் பக்கவாதத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார். அத்தோடு தகுந்த சிகிச்சையும் பெற்று வந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அப் பெண்ணை பரிசோதனை செய்து பார்த்த வைத்தியர்களுக்கு, அவர் மூளை இறப்பு அடைந்தது தெரிய வந்துள்ளது. மேலும், அவரின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்ததில் இரட்டை குழந்தைகள் இருந்ததாகவும் அதே வேளை அக் குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

123 நாட்கள் மூளை இறப்பு அடைந்த தாயின் வயிற்றில் இருந்த குழந்தைகள், குறை பிரசவமாக அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.