2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், www.doenets.lk என்ற இணையத்தளம் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெற்றது. இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து 15 ஆயிரத்து 227 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
இதேவேளை, கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை முற்பகல் 10.00 மணிமுதல் பெறுபேறுகள் வழங்கப்படவுள்ளன.
கொழும்புக்கு வெளியே உள்ள பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.