அடுத்த முதலமைச்சராகும் வாய்ப்பு: அரசியல் வட்டாரங்கள் அதிரடி!

குஜராத்தின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு தான் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இமாச்சலப் பிரதேசத்தின் புதிய முதல்வராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 6-வது முறையாக வெற்றி பெற்ற போதும் கூட வெறும் 99 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடிந்தது.

அந்த நிலத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி மேற்கு ராஜ்கோட் தொகுதியில் வெற்றி பெற்றார். இருப்பினும் முதல்வர் தேர்வுக்கான பரிசீலனை பட்டியலில் அவருக்கு பெரிய அளவில் இடம் இல்லை என்றே கூறப்படுகிறது.

குஜராத் மாநிலத்தின் முதல்வராக ஒரு பெண்ணை நியமிக்கவே பாஜக விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடிப்படியாக வைத்து குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி குஜராத்தின் அடுத்த முதலமைச்சராவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.