இன்னும் சில மணி நேரத்தில் இடம் பெயரும் கிரகங்கள்.. உக்கிரத்திலிருந்து தப்பிக்க?

இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவார்.

large_sani-peyarchi-arrangements-4063இன்று காலை 9.59-க்கு சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார்.

இதனை தொடர்ந்து சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் இன்றும் இரண்டு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஹேவிளம்பி வருடம் மார்கழி மாதம் 4-ம் தேதியான இன்று (19.12.17) காலை 9.59-க்கு சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

சனிபகவானின் இந்த பெயர்ச்சியினால் எந்த இராசிக்கு எந்த விதமான தாக்கங்களை தரப்போகிறார்..?

சனி பகவானின் பிடியிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் செய்ய வேண்டியபரிகாரங்கள்..?

போன்ற கேள்விகளுக்கான பதிலை பற்றி கீழே பார்ப்போம்.

ராசிகளும் சனிபகவானின் தாக்கங்களும்!

மேஷம் – அஷ்டம சனி முடிவடைகிறது

ரிஷபம் – அஷ்டம சனி ஆரம்பம்

மிதுனம் – கண்டக சனி

கடகம் – சனியின் பாதிப்பு இல்லை

சிம்மம் – அர்த்தாஷ்டம சனி முடிவு

கன்னி – அர்த்தாஷ்டம சனி ஆரம்பம்

துலாம் – ஏழரை சனி முடிவு

விருச்சிகம் – பாத சனி

தனுசு – ஜென்ம சனி

மகரம் – விரய சனி

கும்பம் – சனியின் பாதிப்பு இல்லை

மீனம் – சனியின் பாதிப்பு இல்லை

பரிகாரங்கள்

முதல் பரிகாரமாக திருநள்ளாறு சென்று சனி பகவானை வணங்கி வர தோஷம் நிவர்த்தியாகும்.

உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும், அதையே மாற்றக்கூடிய சக்தி சனிபகவானிற்கு உண்டு.

வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தாலும், சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம் படைத்தாலும் ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் எள் கலந்த சாதத்தை வைப்பதன் மூலம் சனியால் ஏற்படும் வினைகளின் வீரியம் குறையும்.

தினமும் உலர்திராட்சை ஒருகைப்பிடி அளவுக்கு, காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.

கறந்த நாட்டு பசுவின் பாலை சனிக்கிழமைத்தோறும் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதன் மூலம் தோஷம் நிவர்த்தியாகும்.

பிரதோஷ வழிபாட்டை மேற்கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்படும் பிரச்சனையின் வீரியம் குறையும்.

காக்கை சனிபகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும். காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள் உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது. எமதர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். ஆகவே, காக்கையை வழிபடுங்கள்.

அதனால், காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும், சனியும் சகோதரர்கள் ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும், சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

காலையில் நாம் எழுவதற்கு முன், காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தக் காரியம் வெற்றிபெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக்கரைந்தால் நல்ல பலன் உண்டு.

வீடுதேடி காகங்கள் வந்து கரைந்தால், அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே, காக்கையை வழிபாடு செய்வதால் சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தினைப் பெற்று மனமகிழ்வுடன் வாழலாம்.

திருநள்ளாரில் இன்று

சனிப்பெயர்ச்சி விழா முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, நேற்று (திங்கள்கிழமை), இன்று (செவ்வாய்கிழமை) (டிச.18,19) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கேசவன் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டும் மதுபானக் கடைக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக உள்ள குடிநீர், உணவு, கழிவறை உள்ளிட்ட வசதிகளோடு, கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளுடன் கோயில் ஊழியர்கள் உதவி செய்து வருகின்றனர்.

பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் வரிசை கலையாமல் அமர்ந்து செல்ல 1000க்கும் மேற்பட்ட நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அவர்களுக்கு உணவு, பிஸ்கெட், தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முக்கியமாக கேமரா மூலம் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதிக்கு கூடுதல் போலீசார் அனுப்பவும், கூட்டத்தை விரைவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சியிலும் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்துவிட்டு செல்ல மிகுந்த சிரத்தையுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.