யாழில் ஆலய விக்கிரகங்கள் திருட்டு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் இனந்தெரியாதவர்களால் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5a35e9fdb7d0e-IBCTAMILநல்லிணக்கபுரம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் காணப்பட்ட பிள்ளையார் மற்றும் முருகனின் கருங்கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகமே இவ்வாறு இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளது.

இவ் சிலை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நல்லிணக்கபுரம் மக்கள் காங்கேசன்துறைப்பொலிசில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.காங்கேசன்துறை பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 13 ஆம் திகதி துவிச்சக்கரவண்டிகள் திருட்டு போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கஸ்தூரியார் வீதியில் அச்சகம் ஒன்றுக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட ஜென்ஸ் துவிச்சக்கரவண்டியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கோண்டாவில் பகுதியினை சேர்ந்த இளஞன் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொக்குவில் நந்தாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு இரவு நேரம் புகுந்த திருடர்கள் வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்ட துவிச்சக்கரவண்டியினை திருடி சென்றுள்ளனர்.