போலி வைத்தியர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்கவும்! அமைச்சர் ராஜித சேனரத்ன கோரிக்கை!!

arres-1-1021x563போலி வைத்தியர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு, சுகாதாரம், போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

போலி வைத்தியர்களை கைது செய்ய ஒத்துழைப்பு வழங்கவும்!

இது தொடர்பாக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவிக்கையில், நாடு பூராவும் 30 ஆயிரம் வைத்தியர்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.சுமார் 15 ஆயிரம் உத்தியோகபூர்வ வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.

இவ்வாறு கடமையாற்றும் உத்தியோகபூர்வ வைத்தியர்கள் பதிவுகளை மேற்கொள்வார்களாயின் போலி வைத்தியர்களை இலகுவாக கண்டறிய முடியும் என்றும், தனிப்பட்ட ரீதியில் மருத்துவ சேவைகளில் ஈடுபட தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவையில் பதிவு செய்யப்படுவது அவசியமாகும் என்றும், கூறியுள்ளார்.

இது தொடர்பான தகவல்களை தனியார் மருத்துவ சேவைகள் ஒழுங்குறுத்தல் பேரவைக்கு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.