பேத்தியின் திருமணத்தை 100 கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக நடத்திய தமிழக முன்னாள் ஆளுனர்!!

படத்தில் நீங்கள் காணும் மணமகள் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவர்களின் பேத்தி ஆவார்.வித்யாசாகர் ராவ் 2014 இலிருந்து மகாரஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகச் செயல்படுபவர். தமிழகத்தில்ரோசையாவின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு 2016-லிருந்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகவும் செயல்பட்டவர்.தற்போது பன்வரிலால் தமிழகத்தின் ஆளுநராக செயல்படுகின்றார்.சட்டம் முடித்து வழக்குரைஞராகப் பணியாற்றிய இவர் 1972இல் கரீம்நகர் மாவட்ட சனசங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நெருக்கடி நிலையின் போது சிறை சென்றார். ஒன்றுபட்ட ஆந்திரப்பிரதேச சட்டமன்றத்தில் 1985லிருந்து 1998 வரை மேத்பல்லி சட்டமன்ற உறுப்பினராகச் பா.ஜ.க சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.1998, 1999 மக்களவை தேர்தலில் கரீம்நகர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998இல் ஆந்திர பா.ஜ.க தலைவராகச் செயலாற்றினார்.தற்போது இவரது பேத்தி திருமணம் குறித்த புகைப்படம் ஒன்று வைரலாக ஆரம்பித்துள்ளது.தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த மகாராக்ஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவின்பேத்தி திருமணத்திற்கு அணிவிக்கப்பட்ட தங்க, வைர நகைகளின் மதிப்பு கிட்டத்தட்ட 70கோடி ரூபாய் இருக்குமாம்.திருமண செலவு 100 கோடி ரூபாய்க்கு மேல். என்ற செய்தி தற்போது இணையத்தில் பரவலாக பேசபடுகிறது.கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள்
தன் குழந்தையின் படிப்பு மற்றும் திருமண செலவிற்காக வங்கியில் ஒரு லட்சத்திற்கும் மேல் சேமித்து வைத்திருந்தால் அதை எடுப்பதற்கு ஆயிரம் கட்டுப்பாடுகள்.அரசின் சட்டங்கள் என்பது ஏழைகளை கட்டுப்படுத்த மட்டும் தானா??