
மாணவர்களுக்கிடையிலான முரண்பாடுகளால் மூடப்பட்டிருந்த வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளை யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்திற்குள் கொண்டாடிய தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து வவுனியா வளாகம் காலவரையரையின்றி மூடப்பட்டிருந்ததுடன் விடுதிகளில் இருந்த மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இந் நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 13 ஆம் திகதியில் இருந்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விடுதிகளில் தங்குவதற்கு தகுதிபெற்றவர்கள் கடந்த 13 அம் திகதியில் இருந்து தங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் வியாபார கற்கைகள் பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் யாவும் 2.01.2018 ஆம் திகதயில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.






