பெண்களுக்கு சொக்லெட் கொடுத்து பாலியல் வல்லுறவு!!

பிரான்ஸில் டெக்ஸி டிரைவர் ஒருவர் தனது டெக்ஸியில் ஏறும் பெண்களுக்கு சொக்லெட் கொடுத்து அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAXI52 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் ஒரு செயலியின் மூலம் தனது டெக்ஸி சேவையை இயக்கி வந்துள்ளார்.

மேலும் தனது வாகனத்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு போதை மருந்து கலக்கப்பட்ட சொக்லெட் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

பெண்கள் இதை உட்கொண்டதும் மயங்கிய நிலையில்  அவர்களுக்கே தெரியாமல் அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளார்.

பெண் ஒருவர் இது குறித்து ஏற்பட்ட சந்தேகத்தின் பெயரில் வைத்திய பரிசோதனைக்கு சென்றபோது இந்த உண்மை வெளிவந்துள்ளது. இதன் பின்னர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் டெக்ஸி டிரைவருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என  அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.