பீகார் மாநிலம் மொகமா நகரை சேர்ந்தவர் சந்தீப் குமார்.இவர்16 வயது பள்ளி மாணவிக்கு பலமுறை மிஸ்டு கால் செய்துள்ளார் அனால் அந்த மாணவி கண்டுகொள்ளவில்லை.
தொடர்ந்து அந்த நபர் மிஸ்டு கால் கொடுக்கவே, ஒரு கட்டத்தில் அந்த பள்ளி மாணவி அவரை தொடர்புகொண்டு பேசியபோது சந்தீப் நட்பாக பேசியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு இடையே நடப்பு ஏற்பட்டு அடிக்கடி கைபேசியில் பேசிவந்துள்ளனர்.இந்த நிலையில் ஒருநாள் தனக்கு 20 வயது ஆகிறது என்றும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியள்ளார்.
மேலும்,என்னை திருமணம் செய்ய மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாக அந்நபர் மாணவியிடம் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி சந்தீப்பை நேரில் சந்திக்க ரயில் நிலையம் சென்று அவரை நேரில் பார்த்த போது அதிர்ச்சியடைந்தார்.
சந்தீபை பார்த்த போது தனது அப்பா வயது உடைய உங்களை திருமண செய்து கொள்ள முடியாது என அந்த மாணவி கூறியுள்ளார்.ஆத்திரமடைந்த சந்தீப் அந்த மாணவியை வற்புறுத்தி ரயிலில் ஏற்றியுள்ளார்.
இதனையடுத்து கழிவறைக்கு சென்ற மாணவி சந்தீப்பிற்கு தெரியாமல் தன் சகோட்டுதரிக்கு போன் செய்து உதவி கேள்ளார். ரயில் Bhagalpur நிலையத்தை அடைந்த போது அங்கு காத்திருந்த போலீசார் சந்தீப்பை கைது செய்துள்ளனர்.