விபத்து : முதியவருக்கு தலையில் பலத்த காயம்!

பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் நேற்றுமுன்தினம்(11) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் முதியவர் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராய் மேற்கு பகுதியினை சோந்த எஸ்.பரமநாதன் வயது(80) என்ற முதியவரே காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்திற்கு உள்ளான முதியவர் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி தள்ளியுள்ளது.

இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய பெண் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5a2f2d4faeed9-IBCTAMIL