கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கடை முதலாளியுடன் உல்லாசமாக இருந்த பெண்!

கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு கடை முதலாளியுடன் உல்லாசமாக இருந்த பெண் அக்கம் பக்கத்தாரால் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

large_girl-gave-sleeping-tablet-3542யாழ் நகரப்பகுதியில் உள்ள அழகுசாதனக் கடை முதலாளியுடன் உல்லாசமாக இருந்த முஸ்லீம் பெண்ணும் முதலாளியும் அக்கம் பக்கத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளார்கள்.

நகரப்பகுக்கு அருகிலுள்ள முஸ்லீம் வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்த புத்தளத்தைச் சேர்ந்த இளம் குடும்பத்துடன் வியாபார ரீதியில் குறித்த கடை முதலாளி தொடர்பு வைத்துள்ளார்.

அக் குடும்பத்தலைவனான கணவன் வெளியிடங்களுக்கு செல்லும் போது கடை முதலாளி அந்த வீட்டில் உள்ள இளம் பெண்ணிடம் வருவதை அந்த வீட்டில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர்.

இந்தநிலையில் இது தொடர்பாக அக் குடும்பத்தில் உள்ளவர்கள் கணவனுக்கு தெரியப்படுத்திய போது கணவன் அந்த பெண்ணை கடுமையாக எச்சரித்திருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், கடந்த ஞாயிறு மாலை 3 மணியளவில் கணவன் தங்கியிருந்த நேரம் அந்த வீட்டுக்கு கடை முதலாளி சென்றுள்ளார். கணவர் கடும் நித்திரையில் இருந்ததை ஏற்கனவே அந்த வீட்டில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

இதற்கிடையே, கடை முதலாளி உள்ளே சென்றதை அறிந்த வீட்டில் இருந்தவர்கள், சிறிது நேரத்தில் அவரை பின் தொடர்ந்து வீட்டில் நுழைந்த போது அப் பெண்ணும் கடை முதலாளியும் அந்தரங்கமான நிலையில் இருந்துள்ளனர்.

அவர்களை அப்படியே புகைப்படங்கள் எடுத்ததுடன் கடும் நித்திரையில் இருந்த கணவனையும் அவர்கள் எழுப்பியதுடன் அக்கம் பக்கத்தினருக்கும் இது தொடர்பாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து,உள்ளாடையுடன் நின்ற கடை முதலாளி அக்கம் பக்கத்தினரால் பிடித்துக் கட்டப்பட்டார். அத்துடன் மயக்க நிலையில் இருந்த கணவனையும் அவர்கள் எழுப்பி நடந்ததை விபரித்துள்ளனர். இதனையடுத்து கணவரால் கடுமையாக முதலாளி தாக்கப்பட்டதோடு அக்கம் பக்கத்தாரும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அவர்களின் தாக்குதலில் கடை முதலாளி மயக்க நிலையை அடையவே அக்கம் பக்கத்தார் அவரது கயிற்றுக் கட்டை அவிழ்த்துவிட்டு அச்சத்தில அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அதன் பின்னர்,மயக்கம் தெளிவடைந்த கடை முதலாளி கடும் காயங்களுடன் அப்பகுதியிலிருந்து சென்றதாகத் தெரியவருகின்றது. கடும் காயங்களுடன் தற்போது தனியார் வைத்தியசாலையில் கடை முதலாளி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தன்னை இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்று தாக்கியதாக அவர் தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளர். அத்துடன் போலீசாருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்த வேண்டாம் என அவர் கூறியும் கேட்காத அவரது மனைவியும் உறவினர்களும் போலீசில் முறையிட்டதால் தற்போது பெரும் சிக்கலில் கடை முதலாளி உள்ளதாக தெரியவருகின்றது.

கடை முதலாளி தங்களது தாக்குதலில் இருந்து தப்பி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், போலீசில் முறையிடப்பட்டுள்ளதும் அறிந்த அந்த பெண்ணின் கணவனும்,அக்கம் பக்கத்தாரும் இதுகுறித்து நேற்று கடை ஊழியர்களுக்கு தெரியப்படுத்தியதும் கடை முதலாளியின் அந்தரங்கக் கோலத்தையும் அவர்களுக்கு காட்டியுள்ளார்களாம். இதனால்,குடுப்பதாரிடம் அவமானப்பட்ட முதலாளி குடும்பம் போலீஸ் விசாரணையை தற்போது நிறுத்துவதற்கு மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.