
கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன் என தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி தொடர்ந்து மோசமாக விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இலங்கை அணி படுதோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், தேவையேற்பட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க முடியும் என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார்.
இது குறித்து ஜெயசேகரா கூறுகையில்…..
இலங்கையின் கிரிக்கெட் சூழ்நிலைகளை மீட்டெடுக்க எனக்கு சிறிது கால அவகாசம் வேண்டும். அதன் நன்மைக்காக, தேவையேற்பட்டால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன்” என தெரிவித்தார்.







