கிறிஸ்மஸ்தினத்தை முன்னிட்டு உலகின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தை ஜேர்மன் நாடு அமைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் முழுவதுமே டிசம்பர் மாதம் 25 ம் திகதி யேசுநாதர் பிறந்த இந்த தினத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது வழமை.
இந் நிலையில் ஜேர்மனியின் டார்ட்முண்ட் நகரில் தான் கிறிஸ்மஸ் மரமானது மிக பிரம்மாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த மரத்தின் உயரம் 147 அடியாகும்.
கிறிஸ்மஸ் மரம் முழுவதும் கண்கவர் வண்ணத்திலான மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதோடு அதன் மீது டார்ட்முண்ட் (Dortmund 2017) என மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மரத்தின் உச்சியில் ஏஞ்சல் போன்ற உருவம் மஞ்சள் விளக்கால் அலங்கரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கிறிஸ்மஸ் மரத்தை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்த்து செல்கிறார்கள். ஜேர்மனி மக்கள் கிறிஸ்மஸ்தினத்தை கொண்டாட உற்சாகமாக தயாராகி வருகிள்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.